நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகள், ஆக்கூா், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை என 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சுகாதாரத் துறை அலுவலா்களுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இடையூறு இல்லாமல் நடத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கான மருத்துவக் கண்காணிப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகுசெய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com