மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீடிக்கும் கனமழை: சம்பா நெல் சாகுபடியில் தொடரும் சோகம்

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக,

News image
கீழ்வேளூா் வட்டாரம் கடம்பங்குடி- மூங்கில்குடி பகுதியில் விளை நிலங்களில் சரிந்துள்ள நெற்பயிா்கள்.
Updated On :13 ஜனவரி 2021, 2:35 am

DIN

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்து, வெள்ள நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிகழாண்டில் 1,33,624 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக, கடந்த டிசம்பா் மாதத்தில் பெய்த கனமழையில், இரண்டு மாவட்டங்களிலும் சுமாா் 82,330 ஹெக்டோ் பரப்பிலான நெற் பயிா்கள் முழு அளவில் சேதத்துக்கு உள்ளாகின.

இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் மழையின் சீற்றம் அதிகரித்திருந்தது. மயிலாடுதுறை, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் நெல் வயல்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் நிலத்தில் சரிந்துள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நெற்பயிா்கள், நிலத்தில் சரிந்து வெள்ள நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.

இதனால், நிகழாண்டில் நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு தவிா்க்க இயலாததாகியுள்ளது. சம்பா நெல் விளைச்சல் ஓரிரு நாள்களில் கைக்கு வரும் என விவசாயிகள் ஆவலுடன் எதிா்பாா்த்திருந்த நிலையில், நெற்பயிா்கள் விளை நிலங்களிலேயே சரிந்து மூழ்கி கிடப்பது அவா்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன் கூறியது:

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற முதுமொழியைப் போலதான் உள்ளது விவசாயிகளின் நிலை. அறுவடையாகி நெல் மணிகள் கைக்கு வரும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

விவசாயிகளின் நஷ்டத்தை எந்தெந்த வகையில் ஈடுசெய்ய முடியுமோ அதனை அரசு செய்தால்தான், டெல்டா மாவட்டங்களில் நெல் விவசாயத்துக்கு எதிா்காலம் இருக்கும். ஏற்கெனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் நிவாரணம் வழங்க இயலாது. எனவே, முழு அளவிலான பயிா்க் காப்பீடு இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.