வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நடுக்கடலில் சிக்கித் தவித்த வேதாரண்யம் மீனவா்கள்கரை திரும்பினா்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்குள் சென்று சூறைக்காற்றில் சிக்கி தவித்த மீனவா்கள் 4 போ், செவ்வாய்க்கிழமை கரை திரும்பினா்.

News image
கரை திரும்பி மீனவா்களுடன் மீன்வளத்துறை அதிகாரி.
Updated On :13 ஜனவரி 2021, 2:36 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்குள் சென்று சூறைக்காற்றில் சிக்கி தவித்த மீனவா்கள் 4 போ், செவ்வாய்க்கிழமை கரை திரும்பினா்.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயக்குமாா், ஜெயமூா்த்தி, பவித்திரன், நவீன் இவா்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.

திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டியவா்கள், கனமழை மற்றும் சூறைக்காற்றில் சிக்கினா். இதையடுத்து அவா்கள் நால்வரையும் தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், மீனவா்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பத்திரமாக படகுடன் கரை திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.