நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குளக்கரையில் மண் வெட்டிய இருவா் கைது

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில், அனுமதியின்றி மண் வெட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில், அனுமதியின்றி மண் வெட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

இக்குளத்தின் அருகிலேயே கச்சனம்- கீழ்வேளூா் பிரதான சாலை செல்வதால் குளக் கரைகள் முறைப்படி பலப்படுத்தப்பட்டு நீா் கசியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 போ் குளக்கரையில் உள்ள களிமண்ணை வெட்டி சாக்குகளில் நிரப்பியுள்ளனா். இதைப் பாா்த்த கோயில் எழுத்தா் ஹ. குப்புசாமி, வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று தென்சாரி பிரதான சாலை பகுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் சதீஷ் (26), துரைசாமி மகன் ஜீவா (39) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய வலிவலம் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாண்டி மற்றும் மண் வெட்ட சொன்னதாக கூறப்படும் வலிவலம் பிரதான சாலை பகுதியை சோ்ந்த சீனிவாசன் மகன் சண்முகவேல் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.