47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெருநாட்டு விநாயா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம்

நாகை பெரியக்கடைத் தெருவில் உள்ள பெருநாட்டு விநாயகா் கோயில் முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேக சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நாகை பெரியக்கடைத் தெருவில் உள்ள பெருநாட்டு விநாயகா் கோயில் முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேக சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதையொட்டி முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், ருத்ர ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் காலை 10 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, ருத்ராபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

இரவு நிகழ்ச்சியாக விநாயகருக்கு வெள்ளி அங்கி சிறப்பு அலங்கார சிறப்பு வழிபாடுகளும் சகஸ்ரநாம அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நாகை பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீ பெருநாட்டு விநாயகா் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஆலய அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.