புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள் 13 பேர் மீட்பு

வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள் 13 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முகாம்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image

வேதாரண்யத்தில் மீட்கப்பட்ட மன நோயாளிகள்.

Updated On :1 ஜூலை 2021, 11:54 am

DIN

வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள் 13 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முகாம்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் மன நோயாளிகள் பலர் சுற்றித் திரிகின்றனர். அவர்கள், உணவு, இருப்பிடம், உடை போன்ற தேவைக்காக அவதியுற நேரிடுகிறது.

மனநோயாளிகளை ஒழுங்குபடுத்தவும், மருத்துவ சிகிச்சை அளித்தல் அல்லது பாதிப்பின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பது போன்ற நோக்கத்துக்காக இவர்களை மீட்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டது.

Story image

வேதாரண்யம் நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 ஆண் மன நோயாளிகள் மீட்கப்பட்டனர். பின்னர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் மூலம் சீர்காழியில் செயல்படும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பணியில், சமூகநாலத்துறை, காவல்துறையினர், சினேகா அறக்கட்டளை, ஈசா அறக்கட்டளை நிர்வாகிகள், பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.