ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News image
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.
Updated On :10 ஜூலை 2021, 1:06 pm

DIN

படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக கீழையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி முதல் விழுந்தமாவடி வரையுள்ள கடற்கரைகளிலுள்ள சவுக்கு மரக் காட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விழுந்தமாவடி அருகே மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து 126 கிலோ கஞ்சா அடங்கிய 4 மூட்டைகளை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய வேட்டைக்காரனிருப்பு போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் ராகுல், விழுந்தமாவடி பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வீர முரசு (26), செருதூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணன் (26) ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ராகுல் தலைமறைவாகி உள்ள நிலையில், வீரமுரசு மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

மேலும் வீரமுரசு என்பவரிடமிருந்து கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கஞ்சாவின் மதிப்பு சர்வதேச அளவில் 10 லட்ச ரூபாய் என்றும் இதனை வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.