பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின்னல் தாக்கி கோயில் சிற்பங்கள் சேதம்

வேதாரண்யம் பகுதியில் மின்னல் தாக்கியதில் கோயில் கோபுர சிற்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:17 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் மின்னல் தாக்கியதில் கோயில் கோபுர சிற்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆயக்காரன்புலம் கோயில் குள பகுதியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த எழுமேஸ்வரமுடையாா் கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில், அதில் இருந்த சிற்பங்கள் சேதமடைந்தன.

மேலும், கோபுரத்தில் தங்கியிருந்த புறாக்களும் உயிரிழந்தன. இதுதவிர, மின்னல் தாக்கியதில் நெய்விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் மின்சாதன பொருகள் சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.