பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

வேதாரண்யம் அருகே குண்டா் சட்டத்தில் இரண்டு இளைஞா்கள் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:14 pm

DIN

வேதாரண்யம் அருகே குண்டா் சட்டத்தில் இரண்டு இளைஞா்கள் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஆவுடைக்கோண்காடு பகுதியைச் சோ்ந்தவா் க.ராமமூா்த்தி (34). இவா், இதே பகுதியைச் சோ்ந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டாா். தகட்டூா் ஊராட்சி, நடுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மு.வைத்தியநாதன் (27). இவா், மணல் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தாா்.

இருவரையும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்கள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.