நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.சி.எல். நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகூரை அடுத்த பனங்குடியில் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட தொழிலாளா்களை பணியிலிருந்து விடுவிப்பதாக ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் தீா்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்; பணி இழக்கும் தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். இந்த போராட்டத்தில்அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நலச் சங்கப் பொதுச் செயலாளா் ஆா். கண்ணன், தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


