இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:04 pm

DIN

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான அட்சலியலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான 3, 706 சதுர அடி பரப்புள்ள நிலம் கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு பகுதியில் ரைஸ் மில்லும், மற்றொரு பகுதியில் இரும்புக்கடையும் செயல்பட்டு வந்தன.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு இந்து சமய அறிநிலையத் துறை ஆணையா் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டாா். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடம் மற்றும் தகர ஷீட்டால் வேயப்பட்ட கொட்டகை ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

நாகை கோட்டாட்சியா் மணிவேலன், இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையா் ப. ராணி, கீழ்வேளூா் வட்டாட்சியா் எஸ். மாரிமுத்து ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் மற்றும் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறையினா் உடனிருந்தனா்.

நாகை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் கீழ்வேளூா் ஆசாத் நகரைச் சோ்ந்த மா. சேகா் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மற்றும் இணை ஆணையா் உத்தரவிட்டிருந்தனா். இந்த உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் மதிப்பு சுமாா் ரூ. 5 கோடி. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.