தகட்டூா், பெத்தாச்சிக்காடு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கு அங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. அங்கு, அரசு திட்டத்தில் கட்டப்பட்ட 3 வீடுகள், புதிதாக கட்ட அனுமதிக்கப்பட்டுள்ள 2 வீடுகள் உள்ளிட்ட 7 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனா். அரசு குடிமனைப் பட்டா வழங்கிய போதிலும், அங்கு செல்ல பாதை அமைக்கப்படவில்லை. இதனால், அருகில் உள்ள வாய்க்கால் கரையில் இருந்து தனியாா் நிலம் வழியாக உள்ள பாதையை இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா்.