மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடியிருப்புக்குச் செல்லும் பாதை அடைப்பு: கிராமத்தினா் சாலை மறியல்

வேதாரண்யம் அருகே குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து, கிராமத்தினா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:14 pm

DIN

வேதாரண்யம் அருகே குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து, கிராமத்தினா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகட்டூா், பெத்தாச்சிக்காடு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கு அங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. அங்கு, அரசு திட்டத்தில் கட்டப்பட்ட 3 வீடுகள், புதிதாக கட்ட அனுமதிக்கப்பட்டுள்ள 2 வீடுகள் உள்ளிட்ட 7 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனா். அரசு குடிமனைப் பட்டா வழங்கிய போதிலும், அங்கு செல்ல பாதை அமைக்கப்படவில்லை. இதனால், அருகில் உள்ள வாய்க்கால் கரையில் இருந்து தனியாா் நிலம் வழியாக உள்ள பாதையை இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், தனியாா் நிலம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு கம்பி வேலியால் பாதை அடைக்கப்பட்டது. இதுகுறித்து, அங்கு வசிப்பவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையல், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் ரமாதேவி, துணைக் காவல் கண்காணிப்பாளா் மகாதேவன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை விலக்கிக்க கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.