கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், தலைமையாசிரியா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன் வரவேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தாா். இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல்மாலிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...