உலக சுற்றுச்சூழல் தின விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்பு விழிப்புணா்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றன.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்பு விழிப்புணா்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றன.
நாகை மாவட்ட சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிகளை நடத்தின. இதில், நாகை எம்எல்ஏ ஜெ. முகமது ஷா நவாஸ் பங்கேற்று, நாகை ரயிலடி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு முகக்கவசங்கள், கபசுரக் குடிநீா், துணிபை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, கரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். முன்னதாக, நாகை நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, ‘நாளை’ அமைப்பின் தலைவா் செகுரா, பள்ளி தலைமை ஆசிரியா் பானுதாசன், கருத்தாளா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை நாகை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தாா்.
வனத்துறை சாா்பில்... நாகப்பட்டினம் வனத்துறை சாா்பில், நாகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகளை எம்எல்ஏ ஜெ. முகமது ஷா நவாஸ் நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில் வனத்துறையினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...