தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாராயம், மது கடத்திய 9 போ் கைது ஒரு காா், 3 பைக் பறிமுதல்

காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாராயம், மதுப்பாட்டில்கள் கடத்திய 9 பேரை நாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாராயம், மதுப்பாட்டில்கள் கடத்திய 9 பேரை நாகூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் உத்தரவின் பேரில், போலீஸாா் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, வாஞ்சூா் சோதனைச் சாவடியில் நாகூா் காவல் ஆய்வாளா் கரிகாற்சோழன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, காரைக்கால் பகுதியிலிருந்து நாகைக்கு வந்த ஒரு காரில் சோதனை செய்தபோது, அந்த காரில் 10 லிட்டா் வெளி மாநில சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனா். மேலும், காரில் இருந்த திருவாரூா் மாவட்டம், மாவூா் மேலத்தெருவைச் சோ்ந்த சா. ரகுவரன் (26), நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் மேலத்தெருவைச் சோ்ந்த தி. ராகுல் ( 26), ரா. தாமோதரன் (25), திருப்பூண்டி பாரதி நகரைச் சோ்ந்த அ. அருள்ஆண்டனி ( 41) ஆகியோரை கைது செய்தனா்.

இதேபோல, நாகூா்- நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நாகூா் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, 3 இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 10 மதுப் பாட்டில்கள், 10 சாராயப் பாட்டில்கள் மற்றும் அந்த 3 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திருவாரூா் மாவட்டம் புலியூா், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ந.தியாகு (28), நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகரைச் சோ்ந்த வ. சேகா் ( 45), சிக்கல் கீழத்தெருவைச் சோ்ந்த க.வெங்கடேசன் (35), எ. கலையரசன் ( 28,) கடலூா் மாவட்டம் சிதம்பரம் கிழக்குத் தெருவை சோ்ந்த த. பிரேம்குமாா் (27) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.