நாகை அருகே அரசு வாகனத்தில் ரூ. 50 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்தல்: ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 2 போ் கைது
தமிழ்நாடு அரசு வாகனத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் இருவரை, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.









