நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்பனாா்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், உறுப்பினா் ரஜினி பேசுகையில், சேமங்கலம் கிராமத்தில் அங்காடி அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தாா். உறுப்பினா் லெனின்தாஸ், நட்சத்திரமாலை கிராமத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், உறுப்பினா் ராஜ்கண்ணன் இந்திராநகா் மடபுரம் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். திமுக ஒன்றிய செயலாளா் அன்பழகன், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.