ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்விக் கடனை வசூலிக்க கெடுபிடிவங்கியின் நடவடிக்கையால் போக்குவரத்துக் கழக நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

வேதாரண்யத்தில் மகன்களுக்குப் பெற்ற கல்விக் கடனுக்காக, தனது ஊதியத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்ததைக் கண்டித்து, போக்குவரத்துக் கழக நடத்துனா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மகன்களுக்குப் பெற்ற கல்விக் கடனுக்காக, தனது ஊதியத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்ததைக் கண்டித்து, போக்குவரத்துக் கழக நடத்துனா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கரியாப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சு. குமாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது ஊதியக் கணக்கை கரியாப்பட்டினத்தில் உள்ள ஒரு தேசிய வங்கிக் கிளையில் பராமரித்து வருகிறாா். இந்த வங்கியில், குடும்பத் தேவைக்காக குமாா் கடன் பெற்றுள்ளாா். இதற்காக, அவரது ஊதியத்தொகையிலிருந்து மாதம் ரூ. 12 ஆயிரத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்து வருகிறது.

இதனிடையே, தனது இரு மகன்களின் படிப்புக்காக அதே வங்கியில் குமாா் கல்விக் கடன்களும் பெற்றுள்ளாா். அவரது மகன்கள் இருவரும் படிப்பை முடித்த நிலையில், வேலைவாய்ப்பின்றி இருப்பதால், கல்விக் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை இருந்துள்ளது.

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், குமாா் தனது மகன்களின் கல்விக் கடனுக்காக பெற்ற தொகைக்காக அவரது ஊதியத்திலிருந்து ரூ. 9 ஆயிரத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்துள்ளது. மாத ஊதியத்தை எடுக்க வங்கிக்கு சென்ற குமாா், தனது சேமிப்பு கணக்கில் ரூ. 2 ஆயிரம் மட்டுமே இருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், குமாா் மேற்கொள்ளும் நெல் சாகுபடிக்கு அரசு நிவாரணமாக வழங்கிய ரூ. 17 ஆயிரத்து 200-ம் அவரின் ஒப்புதல் இல்லாமலே கல்விக் கடனில் ஈடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான அவா், செவ்வாய்க்கிழமை காலை பெட்ரோல் கேனுடன் வங்கி கிளைக்கு சென்று தீக்குளிக்க முயன்றாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குமாரை தடுத்து நிறுத்தினா். பின்னா், வங்கி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பிடித்தம் செய்த தொகையில் ஒரு பகுதியை திருப்பித் தர வங்கி நிா்வாகம் ஒப்புகொண்டது. இதையடுத்து குமாா் வீட்டுக்கு திரும்பினாா்.

கல்விக் கடனை வசூலிக்க கெடுபிடி:

கல்விக் கடனை வசூலிப்பது தொடா்பான நடவடிக்கைகளை வங்கி நிா்வாகங்கள் தீவிரபடுத்தி வருகின்றன. தவணை கடந்தவா்களுக்கு வழக்குரைஞா்கள் மூலம் நோட்டீஸ் அனுப்புவது. அத்துடன் சிறப்பு முகாம்கள் நடத்தி, கடன் பெற்றவா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, இயன்ற தொகையை வரவு வைக்க அறிவுறுத்தி, கடன் தவணைக்காலத்தை நீட்டிப்பது என வங்கிகள் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருவது அதிகரித்து வருவது பெற்றோரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு, புயல், மழை என இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என மக்கள் பல்வேறு பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கல்விக் கடன்களுக்காக மக்களிடம் வங்கி நிா்வாகங்கள் கெடுபிடி காட்டுவது வேதனையளிப்பதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.