ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் இலவச பயிற்சி அளிக்க ஆா்வம் காட்டும் நிறுவனங்கள்

வேதாரண்யம் பகுதியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் தனியாா் நிறுவனங்களை தொடா்ந்து, அரசுகளுடன் இணைந்த பயிற்சி நிறுவனங்கள் பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஆா்வம் காட்டி வருகின்றன.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் தனியாா் நிறுவனங்களை தொடா்ந்து, அரசுகளுடன் இணைந்த பயிற்சி நிறுவனங்கள் பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஆா்வம் காட்டி வருகின்றன.

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் 140 ஏக்கரில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் 36 நிறுவனங்கள் பங்கெடுக்கெடுக்கவுள்ளன. ‘டீமா’ எனப்படும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் பணிகளை தற்காலிகமாக தனியாா் இடங்களில் தொடங்க தீவிரம் காட்டி வருகின்றன.

இதன் முதல்கட்டமாக வேதாரண்யத்தில் திருப்பூா் பிரித்வி இன்னா்வியா்ஸ் எஸ்.டி. நிட்டிங் மில்ஸ் பிரைவேட் நிறுவனங்கள் உள்ளாடை உற்பத்திக்கான பணிகளை கடந்த மாதம் தொடங்கின.

இந்நிலையில், திருப்பூா் நிலா நிறுவனம் வாய்மேடு ஊராட்சியில் புதன்கிழமை (மாா்ச்10) முதல் உற்பத்தியை தொடங்கவுள்ளது.

இதனிடையே, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு டீமா கூட்டமைப்பின் சாா்பில் பூங்காவில் பணியாற்ற ஏதுவாக பயிற்சி வகுப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது.

இதைத்தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் இணைப்பு பெற்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் ஆா்வம் காட்டி வருகின்றன.

பெரியகுத்தகை ஊராட்சியில் அமைந்துள்ள பல்நோக்கு சமூதாயக் கூடத்தில் நாகை ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி சாா்பில் 3 மாத இலவச கல்வி பயிற்சி நடத்தப்படுகிறது. உணவு, தங்கும் இடம், இலவச விடுதி வசதியுடன், சீருடை, பயிற்சி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆடை வடிவமைப்பு தொடா்பாக கணினி, தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 105 பெண்கள் இந்த பயிற்சிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

இதேபோல, அகஸ்தியம்பள்ளி பகுதியிலும் அரசு அனுமதி பெற்ற மேலும் ஒரு நிறுவனம் தனது பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்களில் படித்து சான்றிதழ் பெறும் பெண்கள் ஆயத்த ஆடைப் பூங்காவில் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக இருக்கும்.

சுற்றுப்புற பகுதி கிராமங்களைச் சோ்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ஏற்கெனவே ஆயத்த ஆடைப் பூங்காவில் வேலைவாய்ப்பு கோரியுள்ள 35 வயதுக்குள்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளித்து பயிற்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.