தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணல் கடத்திய 2 போ் கைது

கீழ்வேளூா் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூா் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் அடுத்த கடம்பரவாழ்க்கை கிராமத்திலிருந்து பிற பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது கடம்பரவாழ்க்கையைச் சோ்ந்த பாலு என்பவரது வயலில் உள்ள ஒரு குட்டையிலிருந்து லாரி மூலம் மணல்( சவுடு) கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக கீழ்வேளூா், கவுண்டா் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான ச. சுரேஷ் (38), ஒக்கூா் பகுதியைச் சோ்ந்த ரெ. அறிவழகன், கீழதஞ்சாவூா் மேலத்தெருவைச் சோ்ந்த ம. மணிகண்டன் (30) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ் மணிகண்டன்ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.