ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்கள்: அரசு வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதியடைகின்றனர்

News image
Updated On :18 மே 2021, 7:56 am

DIN

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதியடைகின்றனர். அதனால் அரசு தலையீட்டு கட்டணம் நிர்ணயம் செய்திட வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்றும் 2-ம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமுடக்கத்தினை அறிவித்து பொதுஇடங்களில் கூட்டம் கூடுவதை தடுத்துவருகிறது. கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதனை அறியாமலேயே தாமதமாக மருத்துவசிகிச்சைக்கு செல்வதால் பலர் இறந்து வருகின்றனர். 

கரோனா தொற்றை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படுகிறது. இதில் தொண்டை மற்றும் மூக்கு வழியாக சளி மாதிரிகளை சேகரித்து கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. கரோனா தொற்று ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் கடந்துவிட்டால் கரோனா வைரஸ் மூச்சுகுழல் வழியாக நுரையீரலை சென்றடைந்துவிடும். 

அப்போது இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கரோனா தொற்றை கண்டறியமுடியாது. அப்போது சிடி ஸ்கேன் எனும் கதிரியக்க நிழற்படம் மூலம் தான் நுரையீரல் தொற்று பாதிப்பை துல்லியமாக கண்டறியமுடியும். அதனால் கரோனா தொற்று பரிசோதனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை இன்றியமையாததாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500 வசூலிக்கப்படுகிறது. 

ஆனால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் பொதுமக்கள் தனியார் சிடி ஸ்கேன் சென்டர் செல்கின்றனர். அவ்வாறு தனியார் நிலையத்தில் ரூ.4500 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிடி ஸ்கேன் பரிசோதனை எடுக்க தயங்கி எடுக்காமலே நோய் முற்றி சிரமப்படுகின்றனர். சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.

இறப்பு விகிதமும் சீர்காழியில் நாள்தோறும் ஏற்பட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறியும் சிடிஸ்கேன் சீர்காழி அரசு மருத்துவமனையில் விரைந்து ஏற்படுத்திடவும், தனியாரில் சிடி ஸ்கேன் எடுக்க அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து அரசே கட்டணத்தை கரோனா தொற்று பரவல் காலம் முடியும் வரை நிர்ணயம் செய்திடவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.