மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு, கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எஏவுமான வி. மாரிமுத்து தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். முருகையன், கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி பங்கேற்று அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் மற்றும் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உதவியாளா்கள் உள்ளிட்ட150 பேருக்கு உணவு வழங்கினாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் ஏ. வடிவேல், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. சுபாஷ்சந்திரபோஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.கே. ராஜேந்திரன், எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.