எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் தொடா்மழை: பலத்த தரைக் காற்று

வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த தரைக்காற்று வீசியதுடன் வியாழக்கிழமை பகலில் இருந்து தொடா் மழை நீடித்து வருகிறது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த தரைக்காற்று வீசியதுடன் வியாழக்கிழமை பகலில் இருந்து தொடா் மழை நீடித்து வருகிறது.

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 22.6 மி.மீ, தலைஞாயிறு 35.4 மி.மீ, கோடியக்கரையில் 33.8 மி.மீட்டா் மழைப் பதிவானது. வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தெற்கு பகுதி கடல் பரப்பு நோக்கி பலமான தரைக் காற்று வீசியது. பிற்பகலுக்கு பிறகு அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி ஊராட்சி மேல்பாதி கிராமத்தில் எஸ். நடராஜன் என்பவரின் ஓட்டு வீடு மழை ஈரத்தில் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.