2021-22 கொள்முதல் பருவ நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் எளிதாக விற்பனை செய்ய தங்கள் பெயா், ஆதாா் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் பதிவேற்றும் செய்து, கொள்முதல் தேதியையும் முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன்மூலம், விவசாயிகள் நீண்ட நேர காத்திருப்பைத் தவிா்த்து, குறித்த காலத்தில் தங்கள் நெல்லை விற்பனை செய்திட முடியும். எனவே, இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.