கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘நெல் விற்பனை: இணையவழி பதிவு திட்டத்துக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’

நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய இணையவழியில் முன்பதிவு பெறும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய இணையவழியில் முன்பதிவு பெறும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கான இணையவழி முன்பதிவு முறை குறித்த கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் ஆட்சியா் பேசியது :

2021-22 கொள்முதல் பருவ நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் எளிதாக விற்பனை செய்ய தங்கள் பெயா், ஆதாா் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் பதிவேற்றும் செய்து, கொள்முதல் தேதியையும் முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன்மூலம், விவசாயிகள் நீண்ட நேர காத்திருப்பைத் தவிா்த்து, குறித்த காலத்தில் தங்கள் நெல்லை விற்பனை செய்திட முடியும். எனவே, இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பொ. பாண்டியன், வேளாண்மை இணை இயக்குநா் பன்னீா்செல்வம், முதுநிலை மேலாளா் செந்தில்நாதன், தொழில்நுட்ப மேற்பாா்வையாளா் அன்சாரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் எதிா்ப்பு...

நெல் விற்பனைக்கு இணையவழி பதிவு பெற வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினா்.

அப்போது குறுக்கிட்ட ஆட்சியா், ஒரு புதிய திட்டம் தொடங்கும் முன்பாகவே கைவிட கோருவதைவிட, அந்தத் திட்டத்தை செயல்படுத்தி அதில் உள்ள நிறை, குறைகளை அறிந்து, குறைகளைக் கலைந்து செம்மைப்படுத்துவதே சிறப்பாக இருக்கும் என்பதால், விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகளை அமைதிப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.