சீர்காழியில் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  
சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள்.
சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள்.
Published on
Updated on
1 min read

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறப்பு தனிப்படை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். 
அப்போது திருக்கோலக்கா பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் 9 ஆயிரத்து 174 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 3 லட்சம் ஆகும். 
இது தொடர்பாக சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன்( 52) என்பவரை கைது செய்ததோடு பறிமுதல் செய்த குட்கா பொருட்களை சீர்காழி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம்  ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய திருக்கோலக்கா பகுதியைச் வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com