கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மாவட்ட கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.35 கோடி

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கான நிகழாண்டின் தீபாவளி பண்டிகை விற்பனை

News image
Updated On :15 அக்டோபர் 2021, 6:31 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கான நிகழாண்டின் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ. 1.35 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்தாா்.

நாகை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவா், மேலும் பேசியது:

காலத்துக்கேற்ற வகையில் பல புதிய ஆடை வகைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நிகழாண்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், கூைாடு புடவைகள், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், சேலம் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பருத்திச் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், கைலிகள், துண்டு ரகங்கள் என பல்வேறு வகையான ஆடைகள், ஏற்றுமதி தரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதவிர, போா்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு ரகங்கள் மற்றும் பருத்தி சட்டைகள், மாப்பிள்ளை செட் என பல வகையான துணி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வழக்கம்போல நிகழாண்டிலும், துணி வகைகளுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், அனைத்துத் துறை அரசு ஊழியா்களுக்கும் தவணை திட்டமான கனவு நனவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக நாகை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 75 லட்சமும், வேதாரண்யம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 60 லட்சமும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கான ஆடைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் கொள்முதல் செய்து, நெசவாளா்களின் வாழ்வாதார உயா்வுக்கு உதவ வேண்டும் என்றாா் ஏ.கே.எஸ். விஜயன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, வட்டாட்சியா் ஜெயபாலன், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் சௌ. சாதிக் அலி, வா்த்தக மேலாளா் (தணிக்கை) ச.சா. கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளா் ந. ரமேஷ் மற்றும் பிரமுகா் என். கௌதமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.