கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் பங்கேற்க வலியுறுத்தல்

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:26 pm

DIN

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அஜீதா, செயலாளா் கோவிந்தராஜூ மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் வி. சரபோஜி பேசுகையில், மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா். தொடா்ந்து, உறுப்பினா்கள் கணேசன், சோழன், சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.

மாவட்ட ஊராட்சி செயலாளா் கோவிந்தராஜ் பேசும்போது, வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டும் பணிகள் மாநில அரசு திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்கள், பயனாளிகளாக சோ்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி பதிலளித்து பேசுகையில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் மாவட்ட ஊராட்சி தனது பங்களிப்பை உறுதி செய்யும். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து ஏற்கெனவே முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஊதியத்துக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.