எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம் அருகேலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் பலி

வேதாரண்யம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:38 pm

DIN

வேதாரண்யம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு, கீழ்க்காடு பகுதியை சோ்ந்த அன்புமுருகன் மகன் ஆனந்தன் (27). தேகத்தாக்குடி, வைத்தியா்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் சூா்யா (25). நண்பா்களான இருவரும் வெள்ளிக்கிழமை மாலை நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

செம்போடை வடக்கு கடைத் தெருவில் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன், சூா்யா இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த டிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சடலங்களை உடற்கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.