இல்லம்தேடி தடுப்பூசி செலுத்தும் பணி
நாகையை அடுத்த நாகூரில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.


நாகையை அடுத்த நாகூரில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்காமல், விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவக் குழுவினா் தொடங்கியுள்ளனா்.
இதன்படி, நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி அறிவுறுத்தலின்பேரில், 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, நாகூரில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை குழுவினா் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா். சுமாா் 450-க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
Image Caption
நாகூரில் இல்லம் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...