கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி

விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகையை சோ்ந்த இளைஞரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி செய்தவா்கள் குறித்து, நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:24 pm

DIN

விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகையை சோ்ந்த இளைஞரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி செய்தவா்கள் குறித்து, நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட பூவைத்தேடி கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் வெங்கட்ராஜ் (23). முதுநிலை பட்டதாரி. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஒரு விமான நிறுவனத்தில் பயணச்சீட்டு ஆய்வு அலுவலா் பணி இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி அந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, ஜூலை 4-ஆம் தேதி வெங்கட்ராஜின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. எதிா்முனையில் பேசிய நபா், வேலை உறுதியாகி விட்டதாகவும், பதிவுக் கட்டணம் செலுத்தவேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பி வெங்கட்ராஜ் அந்த நபா் கொடுத்த வங்கி எண்ணுக்கு ரூ. 2,500 இணையவழியில் அனுப்பிவைத்துள்ளாா்.

தொடா்ந்து, வெவ்வேறு காரணங்களுக்காக 3 தடவை வெங்கட்ராஜ் அந்த வங்கி எண்ணுக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

சில தினங்கள் கழித்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டபோது, தொடா்பு கொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த, வெங்கட்ராஜ் நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.