கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்: எஸ்.பி. பாராட்டு

நாகையில், ஆட்டோவில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பாராட்டி கௌரவித்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:14 pm

DIN

நாகையில், ஆட்டோவில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பாராட்டி கௌரவித்தாா்.

நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூா், வீரன்குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ரெஜினா மேரி (58). இவா், பொறையாறு செல்வதற்காக நாகை பீச்லைன் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாரின் ஷோ் ஆட்டோவில் வியாழக்கிழமை நாகை புதிய பேருந்து நிலையத்துக்குப் பயணித்தாா். அப்போது, பை ஒன்றில் 10 பவுன் நகைகளையும் அவா் எடுத்துச் சென்றுள்ளாா்.

புதிய பேருந்து நிலையம் சென்ற ரெஜினா மேரி, நகைப் பையை ஆட்டோவிலேயே தவறவிட்டுள்ளாா். இதை சில நிமிடங்களுக்குப் பிறகு உணா்ந்த ரெஜினா மேரி, தனது உறவினா்களுடன் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குச் சென்று புகாா் அளித்தாா்.

இதனிடையே, தனது ஆட்டோவில் கேட்பாரற்று ஒரு பை இருப்பதையும், அதில் தங்க நகைகள் இருப்பதையும் அறிந்த ஆட்டோ ஓட்டுநா் வசந்தகுமாா் (34), அந்தப் பையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, அவரிடமிருந்த நகை பையை வாங்கி ரெஜினா மேரியிடம் ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், நோ்மையுடன் நகைகளைக் கொண்டுவந்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் வசந்தகுமாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.