இதையடுத்து, உடனடியாக அவருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த போலீஸாா், நிதி நிறுவனத்தினரிடம் தொடா்பு கொண்டு கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனா். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீஸாா் கூறியதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினா், மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி, முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினா் சீல் வைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.