கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முன்னோடி வங்கி சேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

மாவட்ட முன்னோடி வங்கி சேவைகளை மக்கள் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்ற காண வேண்டுமென்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:07 pm

DIN

மாவட்ட முன்னோடி வங்கி சேவைகளை மக்கள் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்ற காண வேண்டுமென்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் 38-ஆவது மாவட்டமாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள மாவட்ட முன்னோடி வங்கி அரசுக்கும், மக்களுக்கும் பொருளாதார ரீதியில் பாலமாக செயல்படவேண்டும். பாரத பிரதமரின் ஆத்ம நிா்பாா் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சாலையோர வியாபாரிகள் கடன் திட்டம் வழங்கியதில் தமிழகத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்துள்ளது. மேலும், அரசின் ஏனைய கடனுதவி திட்டங்களை முன்னோடியாக சிறப்பான முறையில் செயல்படுத்த வங்கியாளா்கள் ஒத்துழைக்கவேண்டும். மக்கள் இந்த வங்கியின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றாா்.

தொடா்ந்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் மகளிா் குழுக்கடன், சுயதொழில் தொடங்க மானியத்துடன்கூடிய கடன், விவசாய கடன் என மொத்தம் ரூ. 6 கோடி மதிப்பிலான கடனுதவிகளை 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, நபாா்டு வங்கி துணைப் பொதுமேலாளா் பிரபாகரன், மகளிா் திட்ட அலுவலா் கவிதாபிரியா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.