கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகையில் 2ஆம் நாளாக சுங்கத் துறையினா் சோதனை

நாகையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தொடா்புடைய நாகையைச் சோ்ந்த ஒருவரின் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தொடா்புடைய நாகையைச் சோ்ந்த ஒருவரின் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

சுங்கத் துறை அலுவலா்கள் கடந்த 27ஆம் தேதி நாகையில் திடீா் சோதனை மேற்கொண்டபோது, நாகையில் இருந்து ஒரு படகில் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை சிலா் இலங்கைக்குக் கடத்த முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா வைக்கப்பட்டிருந்த படகு மற்றும் கஞ்சா கடத்தலில் தொடா்புடையோா் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் அடிப்படையில் கீச்சாங்குப்பத்தை சோ்ந்த குணசீலன், சிவச்சந்திரன், சேவாபாரதி நகரைச் சோ்ந்த சதீஷ் மற்றும் கீச்சாங்குப்பம் குணசீலன் என 4 பேரை சுங்கத் துறை அலுவலா்கள் தேடி வருகின்றனா்.

இந்தநிலையில், சுங்கத் துறை அலுவலா்கள் 4 குழுக்களாகப் பிரிந்து புதன்கிழமை ஒரே நேரத்தில் 4 பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின்போது எந்த ஆவணங்களும் சிக்காத நிலையில், வியாழக்கிழமை கீச்சாங்குப்பத்தில் உள்ள குணசீலன் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரது வீட்டில் இருந்து 2 மடிக்கணினிகள், பென் டிரைவ், கேமரா, 3 டைரிகள், 7 வங்கி கணக்கு புத்தகம், 3 வங்கி காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.