நாகை துறைமுகத்தை மேம்படுத்த கோரிக்கை
நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணி வகைகளை கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணி வகைகளை கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்கக் காப்பாளா் பி.என். ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.எஸ். பாலாஜி ஆண்டறிக்கை படித்தாா். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை பொருளாளா் என். கோவிந்தராஜ் படித்தாா்.
இந்தக் கூட்டத்தில், நாகையை அடுத்த ஒக்கூரில் 1,000 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாராட்டி வரவேற்பதுடன், சிப்காட்டில் 25% இடத்தை சிட்கோவுக்கு ஒதுக்கீடு செய்ய கோருவது. விழுந்தமாவடியில் 1,000 ஏக்கா் பரப்பில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விரைந்து செயல்படுத்தும் வகையில், தாமதமின்றி நிலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்வது. நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணிகளைக் கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் செயலாளா் டி. சிவசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...