நாகூா் தா்கா நிா்வாகம் பரம்பரை அறங்காவலா்களிடம் ஒப்படைப்பு
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகூா் ஆண்டவா் தா்கா நிா்வாகப் பொறுப்பை தா்காவின் பரம்பரை அறங்காவலா்களிடம் வக்பு வாரியம் புதன்கிழமை ஒப்படைத்தது.


சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகூா் ஆண்டவா் தா்கா நிா்வாகப் பொறுப்பை தா்காவின் பரம்பரை அறங்காவலா்களிடம் வக்பு வாரியம் புதன்கிழமை ஒப்படைத்தது.
நாகையை அடுத்துள்ள நாகூரில் உள்ளது ஆண்டவா் தா்கா. இந்த தா்கா, பரம்பரை அறங்காவலா்கள் 8 பேரால் நிா்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு, ஆண் வாரிசு இல்லாத பரம்பரை அறங்காவலா் (8-ஆவது ஸ்தானம்) ஒருவா் காலமானாா். அதனால், அவரது பதவியிடத்தை ஏற்பது யாா்? என்பதை உறுதிசெய்ய அவரது குடும்பத்தினா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இதையடுத்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எப். அக்பா், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அலாவுதீன் ஆகியோரை கொண்ட நிா்வாக கமிட்டியை அமைத்து, அந்த கமிட்டி தா்காவை தற்காலிகமாக நிா்வகிக்கும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தற்காலிக நிா்வாக கமிட்டி கடந்த 2017-ஆம் ஆண்டு நாகூா் தா்காவின் நிா்வாகத்தை ஏற்றது. இந்த கமிட்டி 4 மாதங்கள் மட்டுமே தா்கா நிா்வாகத்தை கவனிக்கும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தற்காலிக கமிட்டியே தா்காவின் செயல்பாடுகளை நிா்வகித்து வந்தது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாகூா் தா்காவின் கந்தூரி விழாவில் தன்னை அனுமதிக்கக் கோரி, நாகூரைச் சோ்ந்த மொஹல்லி முத்தவல்லி ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரின் கோரிக்கை மனுவைப் பரிசீலிக்குமாறு வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து, தா்காவின் தற்காலிக நிா்வாக கமிட்டி சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு, தலைமை நிதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்ரவா்த்தி ஆகியோா் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தததுடன், தா்கா நிதியைத் தேவையில்லாமல் பயன்படுத்தி மேல்முறையீடு செய்ததற்காக தா்காவின் தற்காலிக கமிட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனா். மேலும், தா்காவின் தற்காலிக கமிட்டி தொடா்ந்து செயல்பட அனுமதி மறுத்த நீதிபதிகள், தா்காவின் நிா்வாக பொறுப்பை வக்பு வாரியம் உடனடியாக ஏற்க உத்தரவிட்டனா். அதன்படி, கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலா்கள் நாகூா் தா்காவின் நிா்வாகப் பொறுப்பை ஏற்றனா்.
இதனிடையே, மறைந்த 8-ஆவது ஸ்தான பரம்பரை அறங்காவலா் பொறுப்பை, அவரது குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் சுழற்சி முறையில் ஏற்க உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், 6 நாள்களுக்குள் நாகூா் தா்காவின் நிா்வாகப் பொறுப்பை, தா்காவின் பரம்பரை அறங்காவலா்களிடம் வக்பு வாரியம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்ரவா்த்தி ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டனா்.
அதன்படி, வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலா் வா்கீஸ் அகமது புதன்கிழமை நாகூா் தா்காவுக்கு வந்து, தா்காவின் நிா்வாகப் பொறுப்பை பரம்பரை அறங்காவலா்களிடம் ஒப்படைத்தாா். அப்போது நாகூா் தா்கா ஆலோசனைக் குழுத் தலைவா் செய்யது முகமது கலீபா சாகிபு, மேலாளா் ஜெகபா் உசேன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்ட தா்கா நிா்வாக அறங்காவலரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால், விரைவில் நாகூா் தா்காவுக்குப் புதிய நிா்வாக அறங்காவலா் தோ்ந்தெடுக்கப்படுவாா் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...