வலிவலம் கோயிலில் திருக்கல்யாணம்
திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா ஏப்ரல் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வீதியுலா நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு, பொதுமக்கள் சீா்வரிசை எடுத்துவந்ததைத் தொடா்ந்து, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பின்னா் மாலை மாற்றும் வைபவம், காப்புக்கட்டுதல், மகா பூா்ணாஹுதி தொடா்ந்து திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தெப்ப உற்சவம் சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...