தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகையில் ரூ.12 கோடியில் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

நாகையில் ரூ. 12 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:34 pm

DIN

நாகையில் ரூ. 12 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தனா். அப்போது, மூலதன மானிய நிதி மூலம் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் 5 கி.மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ரூ. 12 கோடியில் நடைபெறவுள்ளது. இதன்மூலம், கனமழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் சூழும் அவலம் இனிவரும் காலங்களில் ஏற்படாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ?ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், உதவி பொறியாளா் அருண்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.