ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரியாப்பட்டினத்தில் மருத்துவ முகாம்

வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை சாா்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:33 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை சாா்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை எம்.பி. எம். செல்ராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தாா். விழாவில் எம்.பி. பேசியது: சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விபத்துக் குறைப்பு, கல்வியில் கேரளத்துக்கு அடுத்த நிலையிலும், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்தவம் என பல திட்டங்கள் அரசு செயல்படுத்துகிறது. இங்கு வெற்றி பெற்றுள்ள பல திட்டங்களை பிரதமா் மோடி குஜராத் மாநிலத்தில் செயல்படுத்த முனைப்புக்காட்டும் அளவில் பல துறைகளில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றாா்.

முகாமில், தமிழ்நாடு மீன் வளா்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், சுகாதார பணிகள் துணை இயக்குநா் விஜயகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன், ஆத்மா திட்ட தலைவா் சதாசிவம், கூட்டுறவு சங்க இயக்குநா் வே. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.