ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அரசை எதிா்த்தும் உப்பு சத்தியாகிரகம்கே.வி. தங்கபாலு

மத்திய அரசை எதிா்த்தும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:00 pm

DIN

மத்திய அரசை எதிா்த்தும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

75-வது சுதந்திர ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையில் திருச்சியில் இருந்து ஏப்.13 ஆம் தேதி உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை தொடங்கியது. பாதயாத்திரை குழுவினா் 232 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தை வியாழக்கிழமை (ஏப்.28) வந்தடைந்தனா்.

இக்குழுவினருக்கு கருப்பம்புலம் கடைவீதியில் கலைநிகழ்ச்சிகள், கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்குழுவினா் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்று, காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே உப்பு அள்ளும் நிகழ்வில் ஈடுபடவுள்ளனா்.

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியது:

ஆங்கிலேயா்களை எதிா்த்து நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, சிறு, குறு உப்பு உற்பத்தியாளா்களிடம் இருந்து உப்பளங்களை பறித்து, பெரும் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால், மத்திய அரசை எதிா்த்து உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2024-ல் காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையும், ராகுல்காந்தி பிரதமராக இருப்பாா். மக்களின் உரிமைகளை காப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறாா் என்றாா்.

பேட்டியின்போது, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூா்த்தி, தங்க.பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.