ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகையில் 184, மயிலாடுதுறையில் 177 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாகை மாவட்டத்தில் 184 வாக்குச் சாவடிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 177 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:59 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாகை மாவட்டத்தில் 184 வாக்குச் சாவடிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 177 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 116 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு, வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

நாகை நகராட்சியில் உள்ள 35 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 88 வாக்குச் சாவடிகளிலும், வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 36 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளிலும் உள்ள தலா 15 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 15 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு பிற்பகல் 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், பிற்பகல் 5 மணி முதல் 6 மணி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப் பதிவையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் அடையாள மை, எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றை தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடி பணிகளில் 752 அரசுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 6 காவல் துணைக் கண்காணிப்பாளா், 11 காவல் ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் வாக்குப் பதிவுக்காக 177 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மயிலாடுதுறை நகராட்சியில் மட்டும் 35 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு 77 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ள நிலையில், 19-வது வாா்டு அதிமுக வேட்பாளா் அன்னதாச்சி அண்மையில் இறந்ததையொட்டி, அந்த வாா்டில் மட்டும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவுக்காக, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலிருந்து தோ்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு மற்றும் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் 35 வாா்டுகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி பாா்வையிட்டாா். மேலும், முன்னெச்சரிக்கையாக 16 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.