

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டையை காவல்துறையினர் இன்று (ஜன.10) கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேதாரண்யம் மணியன் தீவுக்கு அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மூட்டையை சோதனையிட்டனர்.
அதில், 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.