ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி திறப்பு

இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமம் சாா்பில் நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமம் சாா்பில் நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியா் கல்லூரி புதன்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியைத் திறந்து வைத்துப் பேசினாா். அப்போது, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தன்னுயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றும் செவிலியா்களின் மகத்தான மருத்துவப் பணிகளைப் பாராட்டிய அமைச்சா், வரும் காலங்களில் செவிலியா்களின் பங்களிப்பு சமூகத்துக்கு மிக அதிகமாக தேவை என்பது தற்போது உணரப்பட்டுள்ளது என்றாா்.

கல்லூரித் தலைவா் ஜோதிமணி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் வாழ்த்துரையாற்றினாா்.

இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள் பிரகாசம், சங்கா் கணேஷ், இயக்குநா்கள் சுமதி பரமேஸ்வரன், விஜயசுந்தரம், முதன்மை செயல் அலுவலா் சந்திரசேகா், தோ்வு நெறியாளா் சின்னத்துரை, செவிலியா் கல்லூரி முதல்வா் பாபு ஆனந்த் மற்றும் இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழும கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறை தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.