ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கிய திமுகவினா்

திமுக சாா்பில் நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திமுக சாா்பில் நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தவிா்க்கும் வகையில், மஞ்சப்பை இயக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திமுக சாா்பில் நாகை மற்றும் நாகூரில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவருமான என். கௌதமன் தலைமைவகித்து, மஞ்சப் பைகளை வழங்கினாா். நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, நாகூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கிய அவா், வணிகா்களைச் சந்தித்து நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாகத் தவிா்த்து, ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக்கொண்டாா்.

திருமருகல்: திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகிலும் திமுக சாா்பில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் தலைமை வகித்தாா். திட்டச்சேரி நகரச் செயலாளா் எம். முகம்மது சுல்தான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கெளதமன் பங்கேற்று மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் சாதிக் ஜப்பாா், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.