வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவியர் விடுதியில் இன்று (ஜூலை 28) காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதாரண்யத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கியுள்ளனர்.

இன்று காலையில் உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

10 மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற மாணவிகள் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உணவில், பல்லி விழுந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு விரைந்த வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெவஹர், கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


