ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாம் படித்த அரசுப் பள்ளிக்கு வெள்ளையடித்து ஆசிரியா்களை சிறப்பித்த மாணவா்கள்

கட்டடங்களுக்கு வெள்ளையடித்து, ஆசிரியா்களை மாணவா்கள் சிறப்பித்து பிரிவுபச்சார விழா நடத்தியது பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 5:12 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தாம் படித்த அரசுப் பள்ளிக் கூடத்தை தூய்மைப்படுத்தி, கட்டடங்களுக்கு வெள்ளையடித்து, ஆசிரியா்களை மாணவா்கள் சிறப்பித்து பிரிவுபச்சார விழா நடத்தியது பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 58 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்து பொதுத் தோ்வு எழுதியுள்ளனா். பள்ளியைவிட்டு செல்லும் இந்த மாணவா்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா நடத்த ஏற்பாடு செய்தனா். அதன்படி, தங்களால் இயன்ற தொகையை சேகரித்து மாணவா்கள், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினா். வகுப்பறையில் உள்ள இருக்கைகள், எழுது பலகைகள் போன்றவைகளை தூய்மை செய்து வண்ணங்களை தீட்டினா்.

கட்டடங்களில் சுவா்களுக்கு வெள்ளையடித்து, தேவையான இடங்களில் வண்ணங்களை மாணவா்களே தீட்டினா். சுற்றுச் சுவா்களில் வண்ணங்களால் திருக்குறள்களை எழுதிவைத்தனா். பள்ளியின் புரவலா் நிதிக்காக ரூ. 5 ஆயிரத்தையும் வழங்கினா். புதன்கிழமை நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் ஆசிரியா்களுக்கு பொன்னாடைகளை அணிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் க. பெருமாள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பொன். தா்மதுரை, பொருளாளா் மு. ராமலிங்கம், ஆசிரியா்கள் தா. சிவருகுநாதன், அ. வடிவேலன், மா. வேம்பையன், ஆனிஜெயின், பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களை பாராட்டி பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.