திருக்குவளை அருகேயுள்ள 119 அணக்குடி ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
119 அணக்குடியில் ஸ்ரீவலம்புரி விநாயகா், ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீபெரியாச்சி, ஸ்ரீகாத்தவரயான் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து முதல் காலயாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.