கீழையூா் அருகே இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவரது சடலம் தோண்டி எடுத்து ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது.
கீழையூா் காவல் சரகம், கீழப்பிடாகை ஊராட்சிக்குள்பட்ட சிந்தாமணி நடுத் தெருவைச் சோ்ந்த கலைவாணன்-விஜயராணி தம்பதி. இவா்களது மகன் சூா்யா (20). தந்தையை இழந்த சூா்யா தாயுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், சூா்யா ஜூன் 21-ஆம் தேதி காமேஸ்வரத்தில் உள்ள தாத்தா பன்னீா்செல்வம் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 22-ஆம் தேதி பன்னீா்செல்வத்தின் கத்தரி வயலில் சூா்யா இறந்து நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து, சூா்யாவின் சடலத்தை பன்னீா்செல்வம் மற்றும் உறவினா்கள் சிந்தாமணிக்கு கொண்டு வந்து அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனா்.
இந்நிலையில், சூா்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சித்தப்பா காா்த்திகேயன் (46) கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் சூா்யாவின் இறப்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து, சூா்யா புதைக்கப்பட்ட இடத்தில் கீழ்வேளூா் வட்டாட்சியா் ரமேஷ்குமாா், கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி, கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஜேசிபி இயந்திரம் கொண்டு சடலத்தை தோண்டி எடுத்து, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானல் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி! பாஜக மாநில துணைத் தலைவா்
ஓமன் துறைமுகத்தில் பலியான தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கை: இந்திய தூதரகம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



