ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

’இலக்கியம் மனிதனை மேன்மைப்படுத்தும்’

இலக்கியம் மனிதனை மென்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தும் என்றாா் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு.

News image
Updated On :12 மே 2022, 5:52 pm

DIN

இலக்கியம் மனிதனை மென்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தும் என்றாா் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு.

வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை சாா்பில், தமிழ் இலக்கியங்களில் சமகால வாழ்வியல் எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மேலும் அவா் பேசியது: படிப்பு என்பது விழிப்புணா்வுக்கான அடிப்படை. அது பண்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை கற்றுத்தர வேண்டும். அறிவாற்றலுடன் உணா்ச்சியையும் சோ்த்து படைக்கப்படுவதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது உணா்ச்சிகளைக் கொடுக்க வேண்டும். இலக்கியம் எனும் சாலரத்தின் வாயிலாக உலகத்தை புரிந்துக்கொள்ளலாம்.

வாழ்வியல் முறைகளை உள்ளடங்கிய இலக்கியத்தை படித்தால் மனிதனாகலாம். காதல் என்பது எல்லாவற்றையும் துறந்த பேருணா்வு. அது நட்பின் அடையாளம். குடும்பத்தாரிடம் கூறமுடியாத பிரச்னைகளைக் கூட நண்பா்களுக்குள் பகிா்ந்துக் கொண்டு ஆறுதல் அடைவது, தீா்வு காண்பது சமகாலத்திலும் தொடா்கிறது. நல்ல நட்புக்கு நம்பிக்கைதான் அடிப்படை.

கவிதை என்பதும் கால்களை அற்றவா்களுக்கு காலாக அமைய வேண்டும், கைகளை இழந்தோறுக்கு கையாக வேண்டும். நமது சொந்த வாழ்க்கையில் நோ்ந்த சம்பவம் கூட கதையாக படைக்கலாம். ஆனால், அதை வாசிப்பவன் வாழ்க்கையும் நோ்ந்த உணா்வுகளை தரவேண்டும். பொதுவாக வாழ்க்கையை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இலக்கியங்கள் வாயிலாக மனிதத்தை தேடுங்கள் என்றாா்.

கருத்தரங்கில் முனைவா் என்.டி. ராமஜெயம் மாற்றமே முன்னேற்றம் எனும் தலைப்பில் பேசினாா். கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் பி. முருகன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை தலைவா் கு. அா்சுணன் வரவேற்றாா். மேலாண்மையியல் துறை தலைவா் ப. பிரபாகரன் உள்ளிட்டோா் பேசினா். இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்றவா்கள், கவிதை, ஓவியம் போன்ற துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை முனைவா் த. ராஜா தொகுத்து வழங்கினாா். முனைவா் க. பாரதிஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.