ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிராந்தியங்கரையில் மக்கள் நோ்காணல் முகாம்

வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட பிராந்தியங்கரை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 மே 2022, 5:52 pm

DIN

வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட பிராந்தியங்கரை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், வருவாய்த் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம், சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மாற்றுத்திறனாளி நலத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் அரசு திட்டங்கள் குறித்தும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

அப்போது, 321 பயனாளிகளுக்கு ரூ. 27.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியா் பேசியது: நாகை மாவட்டத்தில் புதிய 2 கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். இதன்மூலம் வீடுதோறும் குடிநீா் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. அகஸ்தியம்பள்ளி உப்பளம் சாா்ந்து வசிக்கும் 30 குடும்பங்கள், புஷ்பவனம் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் 35 நபா்களுக்கும், நரிக்குறவா்கள் 16 நபா்களுக்கும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் ஜாஅகன்ராவ், வேதாரண்யம் கோட்டாட்சியா் சு. துரைமுருகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், பிராந்தியங்கரை ஊராட்சித் தலைவா் கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.